ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நெருக்கடி கொடுத்து வருவது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டு உள்ளது. கட்சியின் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை பிடிப்பதில், ஓ.பன்னீர்செல்வம் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி ஏற்பட்டது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை, எடப்பாடி பழனிசாமி நடத்தினார். அதில், 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து, அதே நாளில் அதே பொதுக்குழு மேடையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்தார். இதுவரை நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணைகளில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே சாதகமான உத்தரவுகள் வந்துள்ளன.
இந்நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்காக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை இன்று மீண்டும் சந்தித்து அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த விவகாரத்தில் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே இன்று, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த அதிமுக பொதுக்குழு மேல் முறையீட்டு விசாரணையின் போது, பல்வேறு அதிரடி வாதங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு எடுத்து வைத்துள்ளது. அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள், வெள்ளை மாளிகையில் கலவரத்தை ஏற்படுத்தியது போல், அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர் என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை எடுத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருவது, ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டு உள்ளது. கட்சியின் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை பிடிப்பதில், ஓ.பன்னீர்செல்வம் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து, அதே நாளில் அதே பொதுக்குழு மேடையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்தார். இதுவரை நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணைகளில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே சாதகமான உத்தரவுகள் வந்துள்ளன.
இந்நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்காக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை இன்று மீண்டும் சந்தித்து அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த விவகாரத்தில் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே இன்று, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த அதிமுக பொதுக்குழு மேல் முறையீட்டு விசாரணையின் போது, பல்வேறு அதிரடி வாதங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு எடுத்து வைத்துள்ளது. அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள், வெள்ளை மாளிகையில் கலவரத்தை ஏற்படுத்தியது போல், அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர் என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை எடுத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருவது, ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.