ஆப்நகரம்

எடப்பாடிக்கு அடி மேல் அடி: இது லிஸ்டுலயே இல்லையே - ஓபிஎஸ் ஹேப்பி!

எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக எடுத்த மூவ் அவருக்கே பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Aug 2022, 11:33 am
ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுக்குழுவே செல்லாது என அறிவிக்கப்பட்டதால் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியும் செல்லாது. ஜூன் 23ஆம் தேதிக்கு முன் உள்ள நிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டதால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக அக்கட்சியின் உச்ச பதவியை ஓ.பன்னீர் செல்வமே வகிக்கிறார்.
Samayam Tamil EPS OPS


அதேபோல் பொருளாளர் பதவியும் பன்னீர் செல்வம் வசமே உள்ளது. அப்படியானால் எடப்பாடி பழனிசாமி வசம் தலைமை நிலையச் செயலாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் இருக்க வேண்டும். ஆனால் அதற்கும் சிக்கல் எழுந்துள்ளதாக அதிமுக உள் விவகாரம் அறிந்தவர்கள் கிசுகிசுக்கின்றனர்.

பொதுக்குழு முடிந்த கையோடு தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக சொல்கிறார்கள். அதில், ஜூலை 11இல் கூட்டப்பட்ட அஇஅதிமுக பொதுக்குழு முடிவின்படி, இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் தான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே தான் வகித்த இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலையச் செயலாளர் என்ற பதவிகளை தேர்தல் ஆணையத்தில் உள்ள அஇஅதிமுகவின் பதிவு ஆவணங்களில் இருந்து நீக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாக சொல்கிறார்கள்.
அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி!
இதனால், இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலையச்செயலாளர் ஆகிய பதவிகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி தாமாக முன்வந்து விலகி விட்டதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. இது ராஜினாமாவுக்கு ஒப்பானது என்பதால், இன்றைய நிலையில் அஇஅதிமுகவின் உறுப்பினர் பதவி மட்டுமே, எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது என்கிறார்கள். இதனால் எடப்பாடி பழனிசாமி பயங்கர அப்செட்டில் இருக்கிறாராம். சி.வி.சண்முகம் மூலம் அந்த பிரமாண பத்திரத்தை திரும்பப் பெற முயற்சித்து வருவதாக சொல்கிறார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உடனடி நடவடிக்கை கோரும் திருமாவளவன்
இந்த தகவல் ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சென்றுள்ளதாம். பொதுக்குழுவை அவசரமாக கூட்டி, நிர்வாகிகளுக்கு விட்டமின்களை விநியோகம் செய்து இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்டதாக நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

அடுத்த செய்தி