ஆப்நகரம்

கோர்ட்டுக்கு போனாலும் இதுதான் நடக்கும்: கோகுல இந்திரா திட்டவட்டம்!

எடப்பாடி பழனிசாமிக்குத் தான் ஆதரவு அளிப்போம் என கோகுல இந்திரா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Samayam Tamil 20 Jun 2022, 4:57 pm
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு பெருகிக் கொண்டே செல்கிறது. 60க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil gokula indira


இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த பின்னர் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “என்னுடைய முழு ஆதரவை எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அளித்தேன். எடப்பாடி பழனிசாமிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். கழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எடப்பாடி பழனி சாமிக்கு ஆதரவு அளிப்போம்.எத்தனை வழக்குகள் வந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம் கட்சியின் நலன் கருதி ஓ. பன்னீர்செல்வம் நல்ல முடிவை எடுப்பார்

சொன்னப்படி நிச்சயமாக பொதுக்குழு நடைபெறும்.நீதிமன்றம் சென்றாலும் பெரும்பான்மை எங்களுக்கு தான் இருக்கிறது ஆக திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இன்றைய நிலவரம் இதுதான்!பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான கேபி முனுசாமி, செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட பலர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கே.பி.முனுசாமி, அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி வருகிற 23ஆம் தேதி எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் உறுதியாக நடைபெறும் என்று கூறினார்.

அடுத்த செய்தி