ஆப்நகரம்

அதிமுகவுக்கு சிக்கல்: கைதாகிறாரா மாஜி அமைச்சர்?

கே.சி.வீரமணி விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

Samayam Tamil 27 Sep 2021, 10:52 am
2016 - 2021 அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர் கே.சிவீரமணி.
Samayam Tamil kc veeramani


அவரது வீடு, அலுவலகங்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் என 35 இடங்களில் இரு வாரங்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. இவற்றில் சென்னையில் ஆறு இடங்களும் பெங்களூரில் இரு இடங்களும் அடங்கும்.

இதில் 34 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1.80 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், 5 கணினி கார்டு டிஸ்க், 4.987 கிலோ தங்கம், 47 கிராம் வைரம், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 275 யூனிட் மணல், வங்கிக் கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு வழக்குக்குத் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளன.
எடப்பாடி பின்பற்றும் ஸ்டாலின் ஃபார்முலா: திமுக அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்!

2016 முதல் 2021 வரை அவரது சொத்து மதிப்பு ரூ.1.83 கோடிக்கு மிகாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் 28 கோடியே 78 லட்சத்து 13ஆயிரத்து 758 ரூபாய் அளவுக்கு கே.சி.வீரமணி சொத்துக்கள் வாங்கியுள்ளார். 5 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீதம் சொத்து சேர்த்துள்ளார் என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்தும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை பற்றியும் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கே.சி.வீரமணியை சென்னை அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் முடிவு செய்துள்ளனர். அதற்காக அவருக்கு விரைவில் சம்மன் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அலுவலகத்தில் விசாரணையை முடித்த கையோடு அவரை கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் பேருந்து சேவை: அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டால் அது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

அடுத்த செய்தி