ஆப்நகரம்

திமுகவில் இணைவது எப்போது? அன்வர் ராஜா நடத்தும் ஆலோசனை!

அன்வர் ராஜா அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

Samayam Tamil 2 Dec 2021, 9:57 am
சசிகலாவுக்கு ஆதரவாக வெளிப்படையாக பேசிவந்த அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நேற்று முன் தினம் நீக்கப்பட்டார். பாஜகவுடனான கூட்டணியை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தவர் அன்வர் ராஜா. அப்போது டென்ஷனாக எடப்பாடி பழனிசாமி தரப்பு சசிகலாவை ஆதரித்து அன்வர் ராஜா பேசத் தொடங்கியதும் தனது கோபத்தை காட்டிவிட்டது.
Samayam Tamil mk stalin anwar raja


இதற்கு முன் புகழேந்தி நீக்க அறிவிப்பின் பின்னணியிலும் சசிகலா விவகாரமே இருந்தது. பாமக அன்புமணி ராமதாஸை விமர்சித்தது எல்லாம் வெளியில் சொல்லப்படும் காரணம் தான். சசிகலாவை வரவேற்கலாம் என புகழேந்தி தெரிவித்தது தான் அவரது நீக்க அறிவிப்புக்கு பின்னால் இருந்தது என்று அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சசிகலாவை வெளிப்படையாக ஆதரித்து ஊடகங்களில் பேசிய அன்வர் ராஜாவை எப்படி எடப்பாடி பழனிசாமி தரப்பு நீக்காமல் இருக்கும் என கேள்வி எழுப்புகின்றனர்.
ஸ்டாலின் கொடுத்த பிரஷர்: இது தான் அந்த சீக்ரெட்!
தன்னை பின் தொடர்ந்து பலர் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த அன்வர் ராஜாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களை திரட்டி சென்னையில் இன்னும் இரண்டு நாட்களில் அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கும் போது, “சசிகலாவை நான் சின்னம்மா என்று தான் அழைப்பேன், அதேபோல் கலைஞர் என்று தான் குறிப்பிடுவேன்” என்று கூறியிருந்தார்.
திமுகவுக்கு ஆள்பிடிக்கும் செந்தில் பாலாஜி? கோர்ட்டுக்கு சென்ற புகார்!
இது திமுக பக்கம் சாய்வதற்கான அறிகுறி என்று பேசப்பட்டது. ராஜ கண்ணப்பன் தரப்பு அன்வர் ராஜாவிடம் பேசிவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னர் பெரியளவில் காட்சிகள் மாற்றம் இருக்கும் என அடித்துக்கூறுகின்றனர்.

அடுத்த செய்தி