ஆப்நகரம்

எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி - அதிமுகவினர் செய்த பரபரப்பு செயல்!

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுகவினர் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை இங்கே காணலாம்.

Samayam Tamil 24 Dec 2020, 1:24 pm
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 33வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பல்வேறு உறுதிமொழிகளை உளமார எடுத்துக் கொண்டனர். இதுபற்றி இங்கே விரிவாக காணலாம்.
Samayam Tamil MGR Death Anniversary


* தமிழ்நாட்டில் ஒரு குடும்ப ஆட்சி இருக்கக்கூடாது என்று ஜனநாயகம் காப்பாற்றப்பட புதிய எழுச்சி தந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர் உருவாக்கிய உண்மையான ஜனநாயகத்தைக் காப்போம்.

* ஏழை எளியவர்களுக்கான திட்டங்கள், சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கான திட்டங்கள், பெண்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்காக திட்டங்கள், உழைக்கும் தொழிலாளர்களுக்காக திட்டங்கள், மாணவர்களுக்கான திட்டங்கள் என திட்டங்கள் போட்டவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அதை நிறைவேற்ற ஜெயலலிதாவின் ஆட்சியும் தொடர வேண்டும். அதற்கென உழைப்போம்.

அழகிரி சொன்ன குட் நியூஸ்; தேதி குறிச்சாச்சு - சூடுபிடிக்கும் தமிழக அரசியல்!
* எம்.ஜி.ஆர் செய்த சாதனையைப் போல அவருடைய விசுவாசத் தொண்டர்களாகிய நாம் தான், தொடர்ந்து மூன்றாவது முறையும் ஆட்சி அமைப்போம். மக்கள் ஆதரவு நமக்கே இருக்கிறது. ஜெயலலிதா அவர்களின் ஆன்மா நமக்கு துணை நிற்கிறது. என்றும் வெற்றி. எதிலும் வெற்றி.

* வெட்டி வா என்றால், கட்டி வரும் கடமை வீரர்களாகிய கழக உடன்பிறப்புகள், சிங்கமென தேர்தல் களத்தில் சீறிப் பாய்வோம். சிறு நரிகளை மிரண்டு ஓடச் செய்வோம். எதிரிகளின் பொய் முகங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம் என மக்களுக்கு அடையாளம் காட்டுவோம் என உளமார உறுதி ஏற்கிறோம்.

* இருள் இல்லாத தமிழ்நாடு. பசி இல்லாத தமிழ்நாடு. எம்.ஜி.ஆர் அவர்கள் பொற்கால ஆட்சி. தொடர்ந்து ஜெயலலிதாவின் நல்லாட்சி, விசுவாசத் தொண்டர்களின் நேர்மையான ஆட்சி. மக்கள்தான் எஜமானர்கள் என்று நினைக்கும் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலர ஒற்றுமையுடன் உளமார பாடுபடுவோம்.

உங்களை மாதிரி தான் நானும் நினைத்தேன், ஆனால் முடியல: ஜெயம் 'பூமி' ரவி
* புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கற்றுத் தந்த பணிவு நம்மோடு இருக்கிறது. புரட்சித் தலைவர் ஜெயலலிதா கற்றுத் தந்த துணிவும் நம்மோடு இருக்கிறது. அந்தப் பணிவோடும், துணிவோடும் 2021ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்டுவோம் என்று உளமார உறுதி ஏற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி