ஆப்நகரம்

அதிமுக பொதுக்குழு : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுதாக்கல்!

அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Jun 2022, 3:25 pm
ஜுன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுகுழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் ஜுன் 22ஆம் தேதி நள்ளிரவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதிகாலை வரை சென்ற விசாரணையின் முடிவில் நீதிபதிகள் முக்கிய தீர்ப்பை வழங்கினர்.
Samayam Tamil Madras high court


அதன்படி பொதுக்குழு கூட்டம் நடத்தலாம். 23 தீர்மானங்களை மட்டும் ஆலோசித்து முடிவெடுக்கலாம். மற்ற புதிய தீர்மானங்களில் ஆலோசித்தாலும் எந்த முடிவும் எடுக்க கூடாது என கூறினர்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு, முடிவெடுக்கலாம் ஆனால் அமல்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கையை நிராகரித்தனர்.

இணையும் சசிகலா, ஓபிஎஸ்: என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?

ஆனால் அன்றைய பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் புறக்கணிக்கப்பட்டன, அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட நிலையில் அது மீறப்பட்டதாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எந்தெந்த ஊர்களில் மழை? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

உயர் நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்தது; நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்தது; ஒற்றை தலைமை வேண்டும் என்று கையெழுத்திட்டு ஒப்படைத்தது; ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு என அறிவிக்கப்பட்டது ஆகியவை உயர் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

அடுத்த செய்தி