ஆப்நகரம்

திருப்தி அளிக்கிறதா 3 முதல்வர்களின் ஓராண்டு ஆட்சி?

தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

TNN 23 May 2017, 9:01 am
தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
Samayam Tamil aiadmk government completes one year featuring three chief ministers
திருப்தி அளிக்கிறதா 3 முதல்வர்களின் ஓராண்டு ஆட்சி?


தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. இதன் மூலம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் இருந்த கட்சியே மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற சாதனையை நிகழ்த்தியது.

மே 23ஆம் தேதி ஆறாவது முறையாக முதல்வர் பதவியேற்ற ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் மூடல் உள்ளிட்ட முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். செப்டம்பர் 29ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மே 5ஆம் தேதி காலமானார். அன்று நள்ளிரவே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார்.

பின்னர், கட்சிப் பொறுப்புகள் பொதுச்செயலாள் சசிகலா வசம்செல்ல, ஓ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, பிப்ரவரி 16ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். ஸ்மார்ட் கார்டு திட்டம், மணல் குவாரிகளை அரசே எடுத்து நடத்துவது உள்ளிட்ட முக்கிய திட்டங்களை செயல்படுத்தினார்.

இந்நிலையில், வறட்சி நிவாரண நிதி தொடர்பாக பேசுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்கிறார்.

அடுத்த செய்தி