ஆப்நகரம்

அதிமுக அரசு அரசியல் சாசனத்துக்கு எதிரானது: கபில்சிபல்

எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்திரவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆஜரான கபில்சிபல் அதிமுக அரசு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என வாதாடி வருகிறார்.

TNN 14 Sep 2017, 2:17 pm
சென்னை: எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்திரவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆஜரான கபில்சிபல் அதிமுக அரசு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என வாதாடி வருகிறார்.
Samayam Tamil aiadmk government is against the law kapil sibal
அதிமுக அரசு அரசியல் சாசனத்துக்கு எதிரானது: கபில்சிபல்


சசிகலா சிறைக்குச் சென்றபின், அதிமுக கட்சியினர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் எடப்பாடி தலைமையிலான அதிமுக மீதான தங்கள் ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில், ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை அதிமுக அரசு இழந்துள்ளது.

இதனையடுத்து, தினகரன் தரப்பினரும் மு.க.ஸ்டாலினும் சட்டமன்றத்தைக்கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி அரசை உத்திரவிடுமாறு ஆளுநரை சந்தித்து பலமுறை மனு அளித்தனர். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரை உத்தரவிடக் கோரி வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜரான முத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில்சிபல் ஆளுநரின் மௌனநிலைக் குறித்து பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.

அவர் தனது வாதத்தில், “நீதிமன்றம் உத்தரவிடவில்லையெனில் மைனாரிட்டி அரசானது சட்டவிரோதமாக தொடரும். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது முதல்வரின் கடமை. அதேபோல் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவது ஆளுநரின் கடமை. ஆனால் பலமுறை மனு அளித்தும் ஆளுநர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. பெரும்பான்மை இல்லாமல் அதிமுக அரசு அரசியல் சாசனத்துக்கு எதிராகச் செயல்படுகிறது” என்று கூறியுள்ளார்.

AIADMK Government is against the law: Kapil Sibal

அடுத்த செய்தி