ஆப்நகரம்

பொள்ளாச்சி விவகாரத்தை திசை திருப்பவே சபரீசன் மீது வழக்கு: மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தை உலுக்கியுள்ள பொள்ளாச்சி சம்பவத்தை திசை திருப்பவே தனது மருமகன் சபரீசன் வேதமூர்த்தி மீது அதிமுக குற்றச்சாட்டை சுமத்துவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 Mar 2019, 2:46 pm
தமிழகத்தை உலுக்கியுள்ள பொள்ளாச்சி சம்பவத்தை திசை திருப்பவே தனது மருமகன் சபரீசன் வேதமூர்த்தி மீது அதிமுக குற்றச்சாட்டை சுமத்துவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil பொள்ளாச்சி விவகாரத்தில் சபரீசன் மீது வழக்கு: ஸ்டாலின் கருத்து


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின், மக்களவைத் தேர்தலுக்காக திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். முன்னதாக, அவர் பேசும் போது உயர்நீதிமன்ற கண்காணிப்பில் பொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

அப்போது செய்தியாளர்கள், மருமகன் சபரீசன் மீது பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு தொடர்ந்துள்ளது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக மருமகன் சபரீசன் மீது மட்டுமல்ல, தன் மீதும் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த விவகாரத்தை திசை திருப்பவே சபரீசன் மீது அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கும், திமுக-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.

அடுத்த செய்தி