ஆப்நகரம்

மத்திய அரசை எதிர்க்கும் அதிமுக: 50 % இட ஒதுக்கீட்டுக்காக மனு தாக்கல்!

ஒபிசிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

Samayam Tamil 13 Jun 2020, 1:03 pm
மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil aiadmk has filed a petition about obc 50 percent reservation


தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளின் கீழ் 1758 இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீதம் அகில இந்திய தொகுப்பாக மத்திய அரசு 879 இடங்களை பெறுகிறது.

ஆனால், இட ஒதுக்கீடு கொள்கையின்படி இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27 சதவீத இடங்கள் மட்டுமல்ல ஒரு இடம் கூட வழங்கப்படவில்லை. இதேபோன்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் முதுநிலைப் படிப்பிற்காக அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் ஒரு இடம் கூட இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை.

சமூக நீதிக்கு இழைக்கப்படும் அநீதி: கொந்தளித்து ஒன்று திரண்ட தமிழக அரசியல் கட்சிகள்!

இதில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒரு அணியில் நின்று கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை நாடச் சொன்ன நிலையில், திராவிடர் கழகம், மதிமுக, திமுக சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இரண்டே வாரங்களில் இருபதாயிரம்: வேகத்தைக் கூட்டும் கொரோனா!

இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மீறுவது மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை மத்திய அரசே மீறுவது போல் ஆகிவிடும். மேலும் இந்த இட ஒதுக்கீட்டை மீறுவது இந்திய அரசியல் சாசனத்தை மீறுவதாகும். தகுதிவாய்ந்த இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கு மத்திய அரசு காரணமாக இருக்கக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி