ஆப்நகரம்

இபிஎஸ்-க்கு டெல்லி க்ரீன் சிக்னல்.. அதிமுகவில் நிகழும் அதிரடி மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார்.

Samayam Tamil 21 Sep 2022, 1:30 pm
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஒரு படி மேல்நோக்கி நகர்ந்து வருகிறார்.
Samayam Tamil edappadi k palaniswami
கோப்புப்படம்


திருப்பதி கோவிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய முஸ்லீம் தம்பதி!

ஜூலை 11-ம் தேதி சென்னையில் நடந்த அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நீக்கம் செய்யப்பட்டனர்.

அதன் பின்னர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் எனவும், பொதுக்குழு எடுத்த முடிவை ரத்து செய்யக்கோரியும் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர், மேல்முறையீட்டில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.
'ஜெயலலிதா இருக்கும் போதே சசிகலா எதிர்த்தவன் நான்' - கே.பி.முனுசாமி கர்ஜனை!

பின்னர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த இருநபர் நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதோடு அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ்-க்கு வழங்கவும் உத்தரவிட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமியின் ’கை’ அதிமுகவில் ஓங்கியுள்ளது.

கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு பலமுறை பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டதாக கூறப்பட்டது. ஆனால், கட்சியில் நிலவும் பிரச்சனை காரணமாக அவருக்கு நேரம் வழங்க பிரதமர் அலுவலக தரப்பு மறுத்துவிட்டதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலை டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, நாளை காலை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு கார்த்திகேய சிவசேனாதிபதி அனுப்பிய திடீர் பரிசு!

அதேநேரத்தில் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி கட்சியின் சின்னம், நிர்வாகிகள் குறித்தும் மனு ஒன்றை அளிக்க உள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர்.

ஜூலை மாதம் தலைமை பொறுப்புக்கு வந்தாலும் டெல்லி தலைமை சந்திக்க மறுத்து வந்த நிலையில் தற்போது க்ரீன் சிக்னல் கிடைத்துள்ளதால் எடப்பாடி தரப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

அடுத்த செய்தி