ஆப்நகரம்

அதிமுக குடுமி டெல்லி கையில்: இடைத்தேர்தலும் இரட்டை இலை முடக்கமும்!

அதிமுகவின் உட்கட்சி மோதல் விரைவில் முடிவை எட்ட உள்ள நிலையில் அடுத்தகட்ட நகர்வு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 5 Jan 2023, 11:47 am
அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெறுகிறது. இந்த வாரத்துக்குள் இந்த வழக்கை முடிக்க நினைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள நிலையில் இன்று அல்லது நாளை தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil eps modi


கட்சிகள் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்தின் முடிவை நீதிமன்றம் கேட்கும், அவ்வாறு இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை கேட்டால் என்ன பதில் வரும் என்பது தான் அதிமுகவுக்குள் சுற்றி வரும் கேள்வி. எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வரவு செலவு கணக்கை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றி இடைக்கால பொதுச்செயலாளர் என அவரது பெயரை பதிவிடுவதும், ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பதும் ஒரு பக்கம் நடந்தது.

மற்றொரு புறம் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பவும் செய்கிறது. எனவே தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.
சென்னை சுற்றுலா கண்காட்சி தொடக்கம்: அடேங்கப்பா இவ்வளவு சிறப்பம்சங்களா?
சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் இருந்தே ஒருங்கிணைந்த அதிமுகவை விரும்புவதாக டெல்லி பாஜக கூறிய போதும் எடப்பாடி பழனிசாமி சம்மதிக்க மறுத்துவிட்டார். பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ்ஸையும் கட்சியை விட்டு நீக்கி இடைக்கால பொதுச்செயலாளார் பதவியில் அமர்ந்துகொண்டார்.

“ஓபிஎஸ் ஒருபக்கம், சசிகலா ஒரு பக்கம், தினகரன் ஒரு பக்கம் வாக்குகளை பிரித்தால் அதிமுக பலவீனமாகிவிடும், அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால் நமக்கும் பலன் இருக்காது என்பதே பாஜகவின் எண்ணமாக இருக்கிறது.
ஆதாருக்கு போட்டியா மக்கள் ஐடி? அமைச்சர் விளக்கம்!
எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக அழுத்தங்கள் கொடுத்து இணைப்பை சாத்தியப்படுத்த டெல்லி முயற்சிக்கும். தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு யூகிக்கமுடியாதபடி இருப்பதற்கு காரணம் இல்லாமல் இருக்காது. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரவுள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இரட்டை இலை சின்னத்துக்கு குறி வைத்தால் சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு முடக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு இறங்கி வந்து இணைப்புக்கு சம்மதிப்பதை தவிர வேறு வழி இருக்காது. ஏனெனில் இரட்டை இலையால் மட்டுமே வெற்றி என்பது அவருக்கு நன்றாக தெரியும்” என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி