ஆப்நகரம்

கட்சிக்கொடி கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த அதிமுக தொண்டர்!

சென்னையில், அதிமுக தொண்டர் ஒருவர் கட்சிக்கொடி கட்டும் பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 17 Jan 2017, 7:07 pm
சென்னையில், அதிமுக தொண்டர் ஒருவர் கட்சிக்கொடி கட்டும் பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil aiadmk man erecting flagpole electrocuted in chennai
கட்சிக்கொடி கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த அதிமுக தொண்டர்!


சேலையூர் அருகே உள்ள மப்பேடு பகுதியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த செல்வராஜ் (25) உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் சிலர், இன்று எம்ஜிஆர் 100வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக, அவரது உருவப் பதாகைகள், அதிமுக கொடிகள், தோரணங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராவிதமாக, பள்ளம் தோண்டி, கொடிக்கம்பம் நட்டபோது, தரைக்கடியில் இருந்த உயர் அழுத்த கேபிள் மீது பட்டுள்ளது. இதில், அதிக சக்திவாய்ந்த மின்சாரம் செல்வராஜ் மீது பாய்ந்ததில், அவர் சில அடி தொலைவு வீசியெறியப்பட்டார்.

அருகில் இருந்தவர்கள் செல்வராஜை மீட்டு, மருத்துவமனை கொண்டுசென்றனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி சேலையூர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

An AIADMK worker who was erecting a flagpole was electrocuted when it came into contact with an overhead power cable at Mappedu near Selaiyur on the outskirts of Chennai on Monday.

அடுத்த செய்தி