அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் உச்சத்தை அடைந்துவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், எம்எல்ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர், பொள்ளச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற களேபரத்திற்கு பிறகு கட்சி நிர்வாகிகள், மக்கள் என அனைவரும் ஒன்றுகூடி அதிமுகவுக்கு மட்டுமல்ல; தமிழகத்துக்கும் எடப்பாடி பழனிசாமி தான் தலைமை ஏற்க வேண்டும் என முடிவு செய்துவிட்டனர்.
அதிமுகவை கட்சிக்கு அப்பாற்பட்டு யாரும் வழிநடத்திவிட முடியாது. கட்சி தொண்டர்கள் தான் தலைமையை முடிவு செய்ய வேண்டும். ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவின் மூலம் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார்.
அதிமுக பொதுக்குழுவை நடக்கலாமா, வேண்டாமா? என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது. ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே பொதுக்குழுவை நடத்தலாம்.
ஓபிஎஸ் சுற்றுப்பயணம் செல்வது அவருடைய சொந்த விருப்பம். ஆனால் கட்சியின் தொண்டர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமியின் பக்கம்தான் உள்ளனர் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
அதிமுகவை கட்சிக்கு அப்பாற்பட்டு யாரும் வழிநடத்திவிட முடியாது. கட்சி தொண்டர்கள் தான் தலைமையை முடிவு செய்ய வேண்டும். ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவின் மூலம் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார்.
அதிமுக பொதுக்குழுவை நடக்கலாமா, வேண்டாமா? என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது. ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே பொதுக்குழுவை நடத்தலாம்.
ஓபிஎஸ் சுற்றுப்பயணம் செல்வது அவருடைய சொந்த விருப்பம். ஆனால் கட்சியின் தொண்டர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமியின் பக்கம்தான் உள்ளனர் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.