ஆப்நகரம்

தினகரன் பக்கம் சாய்கிறாரா ராஜன் செல்லப்பா?

மதுரை வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அரசிற்கு எதிராக கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால் இவரும் தினகரனுக்கு ஆதரவாக உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

TNN 20 Sep 2017, 4:56 pm
மதுரை: மதுரை வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அரசிற்கு எதிராக கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால் இவரும் தினகரனுக்கு ஆதரவாக உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Samayam Tamil aiadmk mla rajan chellappa not favoring the speakers decision
தினகரன் பக்கம் சாய்கிறாரா ராஜன் செல்லப்பா?


மதுரையில் நிருபர்களைச் சந்தித்த ராஜன் செல்லப்பா, “மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரும், வைகை ஆற்றில் கட்டப்பட்டுள்ள இரு மேம்பாலங்களுக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா பெயரும் வைக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

ஆனால் அதற்கான அரசாணை இதுவரையில் பிறப்பிக்கப்படவில்லை. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததற்குப் பதிலாக, இடைநீக்கம் செய்திருக்கலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. அதிமுகவைப் பொறுத்த வறையில் சிலிப்பர் செல்கள் என்று யாரும் கிடையாது,” என்று தெரிவித்தார்.

அழகிரி இருந்திருந்தால் நெருக்கடியாக இருந்திருக்கும் என செல்லூர் ராஜு கூறிய கருத்திற்கு பதிலளித்த அவர்,”இது அவருடைய தனிப்பட்ட கருத்து. 1 கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுகவை யாராலும் ஒன்று செய்ய முடியாது.”என்று கூறினார்.

AIADMK MLA Rajan Chellappa not favoring the speaker’s decision of disqualifying 18 MLAs.

அடுத்த செய்தி