ஆப்நகரம்

பிரதமர் எடப்பாடி பழனிசாமி? அதிர்ச்சியில் சக எம்.பி.க்கள்: அமைச்சரின் உளறல் சர்ச்சை!

மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறுவதற்கு பதிலாக, பிரதமர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 25 Jul 2018, 11:36 am
மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறுவதற்கு பதிலாக, பிரதமர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil mp


அதிமுக கட்சியினர் அடிக்கடி வாய் குளறி ஏதாவது தவறாக பேசி மாட்டிக்கொள்வது உண்டு. அந்தவகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட, சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி வாங்கி கட்டிக்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் கூட பழமொழியை தவறாக பேசி கஷ்டப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், கையில் ஒரு ஃபைலை வைத்து கொண்டு, அதனை மேற்கொள் காட்டும் விதமாக "எங்களின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி”, என்று கூறுவதற்கு பதிலாக, "எங்களின் பிரதமர் எடப்பாடி பழனிசாமி, இதனை கொடுத்து அனுப்பியுள்ளார்" என்று கூறி விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக எம்.பிக்கள் சீஃப் மினிஸ்டர்..,சீஃப் மினிஸ்டர் என்று குரல் கொடுக்க, அதனை காதில் வாங்கிக் கொள்ளாத எம்.பி. நவநீதகிருஷ்ணன் அவர்களை சமாதானப்படுத்தவதாக நினைத்துக் கொண்டு "சார் ப்ளீஸ் வெயிட் சார்.., ப்ளீஸ் வெயிட் சார்.....என்று பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்குமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட, சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என்று கூறி நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பிரதமர் இந்திரா காந்தியை முதலமைச்சர் இந்திராகாந்தி என்று கூறி சமூக வலைதளங்களில் வைரலானார்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, பிரதமர் எட்டாப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக எம்.பி. நவனீத கிருஷ்ணன் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி