ஆப்நகரம்

ஆரம்பமே அமர்க்களம் - அதிமுகவிற்கு மக்களவையில் இப்படியொரு பெருமை சேர்த்த ஓபிஎஸ் மகன்!

மக்களவையில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் தங்கள் கட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.

Samayam Tamil 19 Jun 2019, 3:45 pm
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த சூழலில் நேற்று 17வது மக்களவைக்கான முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது.
Samayam Tamil OP-Ravindranath-Kumar


அதில் தமிழகத்தில் இருந்து தேர்வாக எம்.பிக்கள் 38 பேர் பதவியேற்றுக் கொண்டனர். அனைவரும் தாய் மொழியான தமிழில், தமிழ் மொழி பெருமை பேசி, தமிழின தலைவர்களை வாழ்த்தி பதவிப் பிரமாணம் எடுத்தனர்.

அதாவது, தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, இந்தியா வாழ்க, ஜனநாயகம் வாழ்க, காமராஜர் வாழ்க, எம்.ஜி.ஆர் வாழ்க, மார்க்சியம் வாழ்க உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில் 17வது மக்களவையின் சபாநாயகராக பாஜக எம்.பி ஓம் பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.

இதற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து புதிய சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவரை வாழ்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ஓம் பிர்லா நல்ல மனிதர். பொதுவாழ்வில் பல ஆண்டுகள் இருந்தவர்.

எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருப்பவர். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் பாலமாக திகழ்வார் என்று கூறினார். ஓம் பிர்லாவை புதிய சபாநாயகராக நியமிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து எம்.பி ரவீந்திரநாத் குமார் பேசினார்.

அதாவது, ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று அறிஞர் அண்ணா கூறினார். ஏழைகளுக்காக தன் வாழ்வையே எம்.ஜி.ஆர் அர்ப்பணித்தார். ஏழைகளுக்கு பல நல்ல திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார்.

அவர்களைப் போல் ஓம் பிர்லாவும் ஏழைகளுக்கான திட்டங்கள் மீது அதிக முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என்று பேசினார். அதிமுகவினர் எப்போதும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை வாழ்த்தி தங்கள் பேச்சை தொடங்குவர்.

அதையே ரவீந்திரநாத் குமாரும் பின்பற்றியது, மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும் மக்கள் பிரச்சனைகளுக்காக மக்களவையில் எந்தளவிற்கு குரல் கொடுப்பார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

அடுத்த செய்தி