ஆப்நகரம்

தமிழகம் முழுவதும் தினகரன் தலைமையை ஏற்கத் தயார்: சசிகலா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தினகரனைச் சந்தித்த அதிமுக எம்பி சசிகலா புஷ்பா, தமிழகம் முழுவதும் தினகரனின் தலைமையை ஏற்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்

TNN 26 Dec 2017, 10:43 am
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தினகரனைச் சந்தித்த அதிமுக எம்பி சசிகலா புஷ்பா, தமிழகம் முழுவதும் தினகரனின் தலைமையை ஏற்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil aiadmk mp sasikala pushpa has said that she is ready to take ttv dhinakaran as leader
தமிழகம் முழுவதும் தினகரன் தலைமையை ஏற்கத் தயார்: சசிகலா


கடந்தாண்டு ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தன்னைத் தாக்கியதாக நாடளுமன்றத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா.

இந்நிலையில், நேற்று சசிகலா புஷ்பா டிடிவி தினகரனை திடீரென்று சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சசிகலா புஷ்பா,”ஆர்.கே.நகரில் இமாலய வெற்றி பெற்று தினகரன் சரித்திரம் படைத்துள்ளார். எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சாமல் ஆளும் கட்சிக்கு எதிராக மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

ஆர்.கே.நகர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தினகரனின் தலைமையை ஏற்று உழைக்கத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் மயில்சாமி, வேலூர் எம்.பி செங்குட்டுவன் ஆகியோர் தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி