சென்னை: ஓகி புயலின்போது கடலுக்குச் சென்ற சுமார் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை மீட்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அதிமுக எம்பி தம்பிதுரை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த வாரம் கன்னியாகுமரியைத் தாக்கிய ஓகி புயலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, புயல் தாக்கிய பகுதிகளில் அரசு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய மாநில அரசுகள் மீனவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், அரசு தேடல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அங்குள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டாம் நடத்தி வந்தனர்.
இதன்பின், அதிமுக எம்பியும் மாநிலங்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமானைச் சந்தித்து, மீட்புப் பணிகளை துரிதப் படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
On behalf of Tamil Nadu CM, I met Defence Minister requesting to intensify rescue operation in Kanyakumari which is severely affected by #CycloneOckhi. TN Govt is taking all steps to help the fishermen community there. Apart from that we need the support of Centre: M Thambidurai pic.twitter.com/qciTz0tEW8 — ANI (@ANI) December 9, 2017 அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,”தமிழக அரசு மீனவ சமுதாயத்திற்கு உதவ எல்லா நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. அதைத் தவிர, மத்திய அரசின் உதவியும் எங்களுக்குத் தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கன்னியாகுமரியைத் தாக்கிய ஓகி புயலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, புயல் தாக்கிய பகுதிகளில் அரசு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய மாநில அரசுகள் மீனவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், அரசு தேடல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அங்குள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டாம் நடத்தி வந்தனர்.
இதன்பின், அதிமுக எம்பியும் மாநிலங்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமானைச் சந்தித்து, மீட்புப் பணிகளை துரிதப் படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
On behalf of Tamil Nadu CM, I met Defence Minister requesting to intensify rescue operation in Kanyakumari which is severely affected by #CycloneOckhi. TN Govt is taking all steps to help the fishermen community there. Apart from that we need the support of Centre: M Thambidurai pic.twitter.com/qciTz0tEW8 — ANI (@ANI) December 9, 2017 அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,”தமிழக அரசு மீனவ சமுதாயத்திற்கு உதவ எல்லா நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. அதைத் தவிர, மத்திய அரசின் உதவியும் எங்களுக்குத் தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.