ஆப்நகரம்

9 நாட்களாக தொடரும் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தொடர்ந்து 9 வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 15 Mar 2018, 11:58 am
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தொடர்ந்து 9 வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil aiadmk mps stage protest in parliament premises over cauvery issue
9 நாட்களாக தொடரும் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம்

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, நடுவர்மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்த வழக்கில், பிப்ரவரி 16 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அப்போது, 6 வாரங்களுக்குள் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், கர்நாடக அரசோ அதுபோல் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்தது. இதுதொடர்பாக, சமீபத்தில், மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில தலைமை செயலர்கள் கலந்து கொண்டனர்.

இதில், காவிரி நீர் பங்கிட்டு கொள்வதற்காக அமைக்கப்பட உள்ள அமைப்பு எப்படி இருக்க வேண்டும், அதன் செயல்பாடுகள் என்ன, என்னென்ன விஷயங்களை இந்த அமைப்பு கையாளும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
Delhi: AIADMK MPs stage protest in Parliament premises over #Cauvery issue (formation of Cauvery management board). pic.twitter.com/CkWBt7D20E — ANI (@ANI) March 15, 2018 உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை மட்டும்தான் அளித்தது. ஆனால் அதை கட்டாயமாக அமைக்க வேண்டும் என்று கூறவில்லை என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு, தமிழகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது முதல் அதிமுக எம்.பி.கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்றோடு 9 வது நாளாக அதிமுக எம்.பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி