ஆப்நகரம்

எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு? பொள்ளாச்சி ஜெயராமன் அறிவிப்பு!

ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறியுள்ளார் பொள்ளாச்சி ஜெயராமன்.

Samayam Tamil 27 Jun 2022, 11:33 am
ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு மூலம் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
Samayam Tamil eps


திருப்பூர் மாநகர அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "அதிமுகவை இந்த கட்சிக்கு அப்பாற்பட்ட யாரும் வழிநடத்த முடியாது. கட்சித் தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும்தான் இந்த கட்சியை நல்வழிப்படுத்திச் செல்ல முடியும். ஒட்டுமொத்தமாக 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், ஒரே முடிவாக எடப்பாடி பழனிசாமிதான் இந்த கட்சிக்கு ஒற்றை தலைவராக வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் அந்த கூட்டத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை: ஓபிஎஸ் மறுப்பு!
ஜூலை 11ஆம் தேதி , நிச்சயமாக ஒரே தலைமையாக அதிமுகவின் பொதுச் செயலாளராக பொதுக்குழு மூலம் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், திமுகவை எதிர்க்கின்ற வல்லமை படைத்த ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு, ஒன்றரை கோடி தொண்டர்களின் உயிர் மூச்சாக, தமிழக மக்களின் நம்பிக்கையும் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையும் பெற்ற ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.

எடப்பாடி போட்ட பிளான்: ஓபிஎஸ் அந்த பதவிக்கும் ஆபத்து? சும்மா விடுவாரா சசிகலா?

அதிமுக எந்த சாதிக்கும், மதத்திற்கும் கட்டுப்பட்ட இயக்கம் அல்ல. அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டிருக்கிற ஒரு ஜனரஞ்சகமான கட்சிதான் அதிமுக" என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி