அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் அணிகள் உருவாகி உட்கட்சி மோதல் வெடித்து வருகிறது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறியுள்ளனர். ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பணப்பட்டுவாடா நடந்ததாக புதுச்சேரி மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
புதுச்சேரி அதிமுகவிலும் இரட்டை தலைமையே உள்ளது. புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளராக அன்பழகனும், மேற்கு மாநில செயலாளராக ஓம்சக்தி சேகரும் உள்ளனர். அங்கும் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்துள்ளது.
எடப்பாடி பயப்படுவது இதற்கு தான்: பொதுக்குழு நடக்க வாய்ப்புள்ளதா?
இது தொடர்பாக புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஓம்சக்தி சேகர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக கண்டிப்பாக பிளவுப்பட போகிறது. கட்சிக்கு இனி ஒற்றை தலைமைதான். இரட்டை தலைமை ஏற்புடையதல்ல. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் இரு கண்களாக பார்க்கிறேன்.
பொதுக்குழு கூட்டத்தில் கொடுத்த மிகப்பெரிய தொகையை அன்பழகன் வாங்கி வந்து அவரது வீட்டில் வைத்துக் கொண்டார். ஒரு பொதுக்குழு உறுப்பினருக்காவது அந்த பணத்தை கொடுத்தாரா? இது தவறில்லையா?
ஸ்டார் ஹோட்டலில் ஓபிஎஸ் - இபிஎஸ் சந்திப்பு? தவிர்க்க போடும் திட்டம்!
யார் கையில் கட்சி, கொடி, சின்னம் உள்ளதோ, அங்கு புதுச்சேரி மாநில அதிமுகவினர் எனது தலைமையில் செயல்படுவார்கள். அன்றைய தினத்தில் இருந்து அன்பழகன் கட்சியில் இருக்க மாட்டார். தமிழகத்தில் அதிமுக ஒற்றை தலைமை ஏற்றவுடன் புதுச்சேரியில் அதிமுகவின் ஒற்றை தலைமையாக நான்தான் இருப்பேன்” என்று அவர் கூறினார்.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறியுள்ளனர். ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பணப்பட்டுவாடா நடந்ததாக புதுச்சேரி மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
புதுச்சேரி அதிமுகவிலும் இரட்டை தலைமையே உள்ளது. புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளராக அன்பழகனும், மேற்கு மாநில செயலாளராக ஓம்சக்தி சேகரும் உள்ளனர். அங்கும் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்துள்ளது.
எடப்பாடி பயப்படுவது இதற்கு தான்: பொதுக்குழு நடக்க வாய்ப்புள்ளதா?
இது தொடர்பாக புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஓம்சக்தி சேகர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக கண்டிப்பாக பிளவுப்பட போகிறது. கட்சிக்கு இனி ஒற்றை தலைமைதான். இரட்டை தலைமை ஏற்புடையதல்ல. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் இரு கண்களாக பார்க்கிறேன்.
பொதுக்குழு கூட்டத்தில் கொடுத்த மிகப்பெரிய தொகையை அன்பழகன் வாங்கி வந்து அவரது வீட்டில் வைத்துக் கொண்டார். ஒரு பொதுக்குழு உறுப்பினருக்காவது அந்த பணத்தை கொடுத்தாரா? இது தவறில்லையா?
ஸ்டார் ஹோட்டலில் ஓபிஎஸ் - இபிஎஸ் சந்திப்பு? தவிர்க்க போடும் திட்டம்!
யார் கையில் கட்சி, கொடி, சின்னம் உள்ளதோ, அங்கு புதுச்சேரி மாநில அதிமுகவினர் எனது தலைமையில் செயல்படுவார்கள். அன்றைய தினத்தில் இருந்து அன்பழகன் கட்சியில் இருக்க மாட்டார். தமிழகத்தில் அதிமுக ஒற்றை தலைமை ஏற்றவுடன் புதுச்சேரியில் அதிமுகவின் ஒற்றை தலைமையாக நான்தான் இருப்பேன்” என்று அவர் கூறினார்.