ஆப்நகரம்

கம்பி எண்ணியபடியே கட்சியை காப்பாற்றுகிறாராம் சசிகலா

சிறையில் இருந்தபடியே அதிமுகவை கட்டுப்படுத்துவது பொதுச் செயலாளர் சசிகலாவே என்று அவரது மருமகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Jun 2017, 12:16 am
சென்னை: சிறையில் இருந்தபடியே அதிமுகவை கட்டுப்படுத்துவது பொதுச் செயலாளர் சசிகலாவே என்று அவரது மருமகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil aiadmk under the control of sasikala
கம்பி எண்ணியபடியே கட்சியை காப்பாற்றுகிறாராம் சசிகலா


சசிகலாவின் சகோதரரான திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று பரபரப்பைக் கிளப்பியது. அதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு முன் பெற்ற சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டி அளித்த ஜெயானந்த், தேவைப்படும் சமயத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை வெளியிடுவதாகக் கூறினார். “கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாதான். என்றும் அவரே கட்சியை கட்டுப்படுத்தி நடத்திக்கொண்டிருக்கிறார். போயஸ் தோட்டமும் சசிகலாவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது”. என்றும் அவர் தெரிவித்தார்.

“கட்சியின் தலைமை அலுவலகச் செயலாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் இரட்டை இலையை மீட்க எங்களுடைய பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி அவசிமானபோது சசிகலாவை சிறையில் சென்று சந்திப்பார்.” என்ற அவர் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான முடிவை சசிகலாவே எடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி