ஆப்நகரம்

அதிமுக வெளிநடப்பு: சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை - இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக அரசு சர்வாதிகார அரசாக செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 12 Apr 2023, 1:45 pm
சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை நேரலையில் ஒளிபரப்பாததால் அதிமுக வெளிநடப்பு செய்தது.
Samayam Tamil edappadi palanisamy


வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “விருத்தாச்சலத்தில் திமுக கவுன்சிலர் ஆறு வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நேற்று இரவே புகார் அளித்தும் இன்று காலை வரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை.

13 மணி நேரம் கழித்தே கைது செய்துள்ளனர். சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை அதிமுக எழுப்பும் என்பதை அறிந்தே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய திமுக நபரை காப்பாற்ற இந்த அரசு முயற்சித்தது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கு: இன்று நடைபெறும் இறுதி விசாரணை!
எதிர்க்கட்சி மக்களின் பிரச்சினைகளை எடுத்து வைக்கும் போது அரசுதான் அதை கவனித்து சரி செய்ய வேண்டும். திமுக அரசு சர்வாதிகார அரசாக செயல்படுகிறது.

பெண் குழந்தைகள் குறித்து சட்டசபையில் நான் பேசுவதற்கு முன்பும், பின்பும் இருக்கும் காட்சிகளை நேரலையில் காண்பிக்கின்றனர். ஆனால் நான் பேசுவதை ஒளிபரப்பாமல் புறக்கணிக்கின்றனர். கேள்வி கேட்பதை ஒளிபரப்பு செய்யாமல், பதில் சொல்வதை மட்டும் ஒளிபரப்புகின்றனர்.

சட்டப்பேரவை நடுநிலையாக செயல்படவில்லை. ஆளும் கட்சியினரின் கண் அசைவுக்கு ஏற்ப சபாநாயகர் செயல்படுகிறார்.
கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு: மாநிலங்கள் வாரியாக பாதிப்பு விவரம்!
எதிர்கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானோர் சேர்ந்துதான் எதிர்கட்சித் தலைவர், எதிர்கட்சித் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆர்.பி.உதயகுமாரை எதிர்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுத்து சபாநாயகரிடம் அதற்கான ஆவணங்களை கொடுத்தும் அவர் அங்கீகரிக்க மறுக்கிறார். ” என்று கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி