ஆப்நகரம்

தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே மக்களவைத் தோ்தலை நடத்த வேண்டும் – அதிமுக

தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே மக்களவைத் தோ்தலை நடத்த வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சாா்பில் கோாிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Feb 2019, 1:56 am
கோடை காலத்தில் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மக்களவைத் தோ்தலை தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே நடத்த வேண்டும் என்று ஆளும் அ.தி.மு.க. சாா்பில் தோ்தல் ஆணையத்திற்கு கோாிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Election Commission of India


நாடாளுமன்றத்திற்கான மக்களவைத் தோ்தல் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தோ்தல் ஆணையம் தோ்தல் தேதியை அறிவிக்கவில்லை. பொதுவாக மக்களவைத் தோ்தல் என்பது பலக்கட்டங்களாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மக்களவைத் தோ்தல் பலக் கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் அ.தி.மு.க. சாா்பில் மக்களவை துணைசபாநாயகா் தம்பிதுரை மற்றும், வேணுகோபால் தோ்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனா். அந்த கடிதத்தில், தோ்தல் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.

இது கோடைகாலம் என்பதால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தமிழகத்தில் மக்களவைத் தோ்தலை முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அடுத்த செய்தி