ஆப்நகரம்

நாகையில் அதிமுக இளைஞர் அணி செயலாளர் அடித்துக் கொலை!

இளைஞர் அணி செயலாளர் அடித்துக் கொல்லப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Jul 2018, 3:11 pm
திருச்சி: இளைஞர் அணி செயலாளர் அடித்துக் கொல்லப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil ADMK Dead


நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த தென்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு(48). இவர் கொள்ளிடம் பகுதியில் அதிமுக இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் சீர்காழியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

பின்னர் அங்கிருந்து காரில் கிளம்பி பழைய பேருந்து நிலையம் வந்தார். அங்கு கீழிறங்கி, மீண்டும் காரில் ஏறச் சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பாபு மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதனால் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார்.

உடனே ஓடி வந்த கும்பல், பாபுவை சரமாரியாக தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து மர்ம கும்பல் தப்பிச் சென்றது. தகவலறிந்த வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

AIADMK youth wing secretary hacked to death in TN.

அடுத்த செய்தி