ஆப்நகரம்

2022ஆம் ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்: மத்திய அரசு

ரூ.1264 கோடி மதிப்பிலான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

Samayam Tamil 29 Nov 2019, 5:38 pm
டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார்.

அதனையடுத்து, இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தேஜஸ் சொகுசு ரயிலில் பாதிப்புக்குள்ளாகும் ஊழியர்கள்!

ரூ.1264 கோடி மதிப்பிலான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

'கோட்சே தேசபக்தர்' என்ற பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் பிரக்யா தாகூர்!!

இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரை தோப்பூர் எய்ம்ஸ் திட்டத்திற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி