ஆப்நகரம்

சென்னையில் தாய் எரித்துக் கொலை; மகன் கைது

சென்னை அரும்பாக்கத்தில் திருமணம் செய்துவைக்காததால், ஆத்திரம் அடைந்த மகன், தனது தாயை தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

TNN 1 May 2016, 9:56 pm
சென்னை அரும்பாக்கத்தில் திருமணம் செய்துவைக்காததால், ஆத்திரம் அடைந்த மகன், தனது தாயை தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil ailing woman dies after son sets her on fire in chennai
சென்னையில் தாய் எரித்துக் கொலை; மகன் கைது


அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சசிகலா (60). இவரது மகன் அமர்நாத் பிரசாத். கார் டிரைவர் வேலை செய்யும் பிரசாத்துக்கு, திருமண வயது கடந்த நிலையில், திருமணம் செய்துவைக்கும்படி தாய் சசிகலாவை வற்புறுத்தி வந்துள்ளார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிரசாத்துக்கு பெண் கொடுக்க, உறவினர்கள் யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த பிரசாத், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சசிகலா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், சசிகலாவை தாக்கி, சேரில் கட்டி வைத்துவிட்டு, மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துள்ளார். சசிகலாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், சசிகலா உயிரிழந்தார். இதுபற்றி வழக்குப் பதிவு செய்த அரும்பாக்கம் போலீசார், அமர்நாத் பிரசாத்தை கைது செய்தனர்.

அடுத்த செய்தி