ஆப்நகரம்

திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரை உரசிச் சென்ற ஏர் இந்தியா விமானம்; விசாரணை தொடக்கம்!

திருச்சி: விமான விபத்து விசாரணை ஆணையம் சார்பில் திருச்சி விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

TIMESOFINDIA.COM 16 Oct 2018, 9:21 pm
கடந்த 12ஆம் தேதி, திருச்சி விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 1.18 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாய்க்கு புறப்பட்டது. அப்போது விமான நிலைய கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தியது.
Samayam Tamil Trichy


விமானம் எந்தவித பாதிப்பும் இன்றி, மும்பையில் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து விசாரணை ஆணையக் குழுவினர் திருச்சி விமான நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கு சிவில் ஏவியேஷன் துறை துணை இயக்குநர் தினேஷ் குமார் யாதவ் தலைமை வகிக்கிறார். அவர்கள் சேதமடைந்த சுற்றுச்சுவர் மற்றும் கோபுரத்தை பார்வையிட்டனர்.


இதன்பிறகு விபத்தின் போது விமானி மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு இடையே நடைபெற்ற உரையாடல் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட பதிவேட்டையும் ஆய்வு செய்யவுள்ளனர்.

பின்னர் விபத்தின் போது பணியில் இருந்த ஊழியர்கள், வானிலை அறிக்கை உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொள்கின்றனர்.

Air India Express plane accident AAIB team begins probe at Trichy airport.

அடுத்த செய்தி