ஆப்நகரம்

Air India Flight: திருச்சியில் டவர் மீது உரசிச் சென்ற விமானம்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

திருச்சி: ஏர் இந்தியா விமானம் டவரில் உரசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Oct 2018, 10:10 am
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா விமானம் துபாய் நோக்கி இன்று அதிகாலை புறப்படவிருந்தது. விமானம் ஓடு பாதையில் இருந்து, மேலே எழும்பிய போது போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தின் மீது உரசிச் சென்றது.
Samayam Tamil Trichy


மேலும் விமான நிலைய சுற்றுச்சுவரும் சேதமடைந்தது. இதனால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக தட்டுத் தடுமாறி விமானம் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் விமானத்தில் சென்ற 130 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில் ஏர் இந்தியா விமானம் மும்பையில் பத்திரமாக தரையிரங்கியது.
Air India Flight damages Trichy Airport communication tower and compound wall.

அடுத்த செய்தி