ஆப்நகரம்

சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு மாசு : மக்கள் அவதி!

சென்னையில் இதுவரை இல்லாத அளவு அதிகளவில் ஒலி மாசு ஏற்பட்டது. பட்டாசு புகையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

TNN & Agencies 19 Oct 2017, 9:26 am
சென்னை: சென்னையில் இதுவரை இல்லாத அளவு அதிகளவில் ஒலி மாசு ஏற்பட்டது. பட்டாசு புகையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
Samayam Tamil air pollution went high in chennai on diwali day as smoke came from crackers
சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு மாசு : மக்கள் அவதி!


நாடு முழுவதும் தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளி இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று கொண்டாட்டங்கள் சிறப்பாக இருந்தன.

பட்டாசு, வான வேடிக்கைகளை என சென்னை முழுவதும் களைகட்டியது. சென்னையில் ஐந்து இடங்களில் ஒலி மாசு பற்றிய ஆய்வு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது.

இதில் இதுவரை இல்லாத அளவு அதிகளவில் ஒலி மாசு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அதிகளவில் ஒலி மாசு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புகை மூட்டம் காரணமாக சென்னையில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டதை பல இடங்களில் பார்க்க முடிந்தது. மக்களுக்கு பட்டாசு மீது கூடுதல் ஆர்வமே அதிக அளவிலான பட்டாசு பயன்பாட்டிற்கு காரணம் என தெரிகிறது

அடுத்த செய்தி