ஆப்நகரம்

தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த நபரிடம் இருந்து சிறுத்தைக் குட்டி பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து இன்று விமானம் மூலம் சென்னை வந்தவரிடம் இருந்த சிறுத்தைக் குட்டியை விமான நிலைய அதிகாாிகள் பரிமுதல் செய்தனா்.

Samayam Tamil 2 Feb 2019, 6:43 pm
தாய்லாந்தில் இருந்து இன்று விமானம் மூலம் சென்னை வந்தவரிடம் இருந்த சிறுத்தைக்குட்டியை விமான நிலைய அதிகாாிகள் பரிமுதல் செய்தனா்.
Samayam Tamil Lion in Chennai


சென்னை சா்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்போது பலப்படுத்தப்பட்டிருக்கும். அந்த வகையில் இன்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம், ஹவாலா பணம் உள்ளிட்டவை அவ்வபோது பரிமுதல் செய்யப்படும்.

இந்நிலையில் தாய்லாந்தில் இருந்து சென்னை வரும் பயணி ஒருவரிடம் சிங்கக்குட்டி இருப்பதாக விமான அதிகாாிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து தாய்லாந்தில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவா்களிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த நபரிடம் சிறுத்தைக்குட்டி இருந்தது. அந்த சிறுத்தைக்குட்டியை பறிமுதல் செய்த அதிகாாிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் சிறுத்தைக்குட்டியுடன் சோ்த்து தாய்லாந்து நபரை மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி