ஆப்நகரம்

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் சிக்கியது

திருச்சி விமான நிலையத்தில் இன்று ரூ.36 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை விமானத்துறை நுண்ணறிவுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

TNN 4 Feb 2017, 11:50 am
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இன்று ரூ.36 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை விமானத்துறை நுண்ணறிவுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Samayam Tamil aiu seized 1 24 kg gold at trichy airport
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் சிக்கியது


திருச்சி விமான நிலையத்தில் விமானத்தில் இன்று சோதனை மேற்கொண்ட விமானத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மலேசியா விமானத்தில் கட்டிகட்டியாக கடத்தல் தங்கத்தைக் கைப்பற்றினர். மலேசியாவில் இருந்து சென்னை வழியாக திருச்சி விமான நிலையம் வந்த விமானத்தில் இந்தத் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 1.24 கிலோ எடையுள்ள அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.36 லட்சம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, முகமது சுல்தான் மற்றும் ஜலாலுதீன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடக்கிறது.

அடுத்த செய்தி