ஆப்நகரம்

கோவையில் பேனர் வைத்த அஜித் ரசிகர் கைது

கோவையில், உரிய அனுமதியின்றி பேனர் வைத்த அஜித் ரசிகரை, போலீசார் கைது செய்தனர்.

TNN 3 May 2016, 4:58 pm
கோவையில், உரிய அனுமதியின்றி பேனர் வைத்த அஜித் ரசிகரை, போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil ajith fan arrested for putting up banner
கோவையில் பேனர் வைத்த அஜித் ரசிகர் கைது


கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சுந்தராபுரம் பகுதியில் நடிகர் அஜித் பிறந்த நாளை ஒட்டி, அவரது ரசிகர்கள் அப்பகுதியில் பிளக்ஸ் பேனர் வைப்பதாக போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அங்கு சென்ற போலீசார், உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட அந்த விளம்பரப் பதாகையை அகற்றினர். மேலும், இதுதொடர்பாக குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த எஸ்.மகேஷ் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அடுத்த செய்தி