ஆப்நகரம்

ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தானா? மதுக்கடைக்கு இல்லையா? யோசிக்க வைத்த சிறுவன்

மதுக்கடைகளுக்கு எதிராக நடக்கயிருக்கும் படிக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறுவன் ஆகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

TNN 11 May 2017, 7:02 pm
மதுக்கடைகளுக்கு எதிராக நடக்கயிருக்கும் படிக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறுவன் ஆகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
Samayam Tamil akash pressmeet about tasmac protest
ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தானா? மதுக்கடைக்கு இல்லையா? யோசிக்க வைத்த சிறுவன்


காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3ம் வகுப்பு சிறுவன் ஆகாஷ் தொடர்ந்து மதுக்கடைக்கு எதிராக போராடி வருகிறார். புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் முதல் போராடி வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், எங்கள் ஊரில் மதுக்கடைகளே இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது நெடுஞ்சாலையில் மதுக்கடையை மூடியதன் விளைவாக ஒரு மதுக்கடையை திறந்துள்ளனர்.

இதனை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டேன். இதன் காரணமாக தற்காலிகமாக இரண்டு நாட்கள் மட்டும் கடை மூடப்பட்டது. இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் கடை திறக்கப்பட்டது. இந்த மதுக்கடைகளை எதிர்த்து வரும் 13ம் தேதி நெடுஞ்சாலைகளில் படிக்கும் போராட்டம் நடக்கயிருக்கிறது. இதில், மதுக்கடைக்கு எதிராக குரல் கொடுக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி