ஆப்நகரம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்: வரிசையில் நின்று முன்பதிவு செய்த மாடுபுடி வீரர்கள்

பாலமேடு, அலங்காநல்லூரில் வருகின்ற 15 மற்றும் 16ம் தேதிகளில் ஜல்லிகட்டு நடக்கவிருக்கும் நிலையில் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 12 Jan 2018, 1:28 pm
பாலமேடு, அலங்காநல்லூரில் வருகின்ற 15 மற்றும் 16ம் தேதிகளில் ஜல்லிகட்டு நடக்கவிருக்கும் நிலையில் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
Samayam Tamil alanganallur jallikattu 2018 on january 15 16 and registration starts today
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்: வரிசையில் நின்று முன்பதிவு செய்த மாடுபுடி வீரர்கள்


தமிழர்களின் பண்பாடான ஜல்லிகட்டுக்கு தடை நீங்கி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் ஜல்லிகட்டு நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக ஜனவரி 2 ஆம் தேதி புதுக்கோட்டையில் உள்ள தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் சுமார் 450 காளைகளும் 100 க்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்துகொண்டனர். போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வருகின்ற 14 தேதி மதுரையில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான முன்பதிவு நேற்று நடைபெற்றது. நேற்று முன்பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயம் என்று கூறப்பட்டது பின்பு ஆதார் அல்லது ரேஷன் அட்டைகளை காண்பித்து முன்பதிவு செய்யலாம் என்று விழா கமிட்டி கூறியது.

இந்நிலையில் வருகின்ற 15 ஆம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிகட்டு நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளவிருக்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று நடைபெற்றது. காலை 6 மணியிலிருந்து 100 மேற்பட்ட வீரர்கள் வரிசையில் நின்று முன்பதிவு செய்துகொண்டனர். 15, 16ம் தேதிகளில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டது.

ஜல்லிகட்டு வீரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அவர்களது புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். மேலும் அவர்களின் ஆதார் அல்லது ரேஷன் அட்டைகளை காண்பித்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த ஜல்லிகட்டி போட்டிகளில் 954 காளைகள், மற்றும் 623 வீரர்கள் கலந்துகொள்ள இருகின்றனர்.

அடுத்த செய்தி