ஆப்நகரம்

அலங்காநல்லூர் வாடிவாசலை ஆய்வு செய்த மதுரை கலெக்டர்!

அலங்காநல்லூர் வாடிவாசலை மதுரை கலக்டர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார்.

TOI Contributor 20 Jan 2017, 6:52 pm
அலங்காநல்லூர் வாடிவாசலை மதுரை கலக்டர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார்.
Samayam Tamil alanganallur vativasalai collector who study
அலங்காநல்லூர் வாடிவாசலை ஆய்வு செய்த மதுரை கலெக்டர்!


ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றியுள்ளது. குடியரசு தலைவரிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று மதியம் சுமார் 1 மணியளவில், ஜல்லிக்கட்டுக்கு முன்னதாக நடத்தப்படும் ஆய்வான அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இதையடுத்து கிட்டத்தட்ட ஜல்லிக்கட்டு நடப்பது உறுதியாகியுள்ளது.

அடுத்த செய்தி