ஆப்நகரம்

திருச்சியை தலைநகராக்க திருநாவுக்கரசர் கோரிக்கை!

சென்னையில் உள்ள அனைத்து இயக்குநரகங்களையும் திருச்சிக்கு மாற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Dec 2019, 3:21 pm
தந்தை பெரியார், எம்ஜிஆர் என இரு தலைவர்களின் நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படும் நிலையில் திருச்சியில் இருவரது திருவுருவச் சிலைகளுக்கு, மூத்த காங்கிரஸ் தலைவரும், திருச்சி எம்.பி.,யுமான திருநாவுக்கரசர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Samayam Tamil திருச்சியை தலைநகராக்க திருநாவுக்கரசர் கோரிக்கை


அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக திருச்சியை மாற்ற வேண்டும் என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் கனவை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக சென்னையில் உள்ள அனைத்து இயக்குனரங்களையும், திருச்சிக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

எம்ஜிஆர் காட்டிய வழி மட்டுமல்ல, ஜெயலலிதாவின் வழியிலும் தற்போதைய அதிமுக அரசு நடக்கவில்லை. மத்திய அரசின் அடிமையாக நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

எனக்கு "கோல்ட் மெடல்" வேண்டாம்... சிங்கப் பெண்ணின் அதிரடி முடிவு!!

இரு தலைநகரங்கள் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் பெரியளவில் பேசுபொருளாகக்கூட ஆகாத நிலையில் ஆந்திராவில் மூன்று தலைநகரங்களை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TN Assembly: சட்டப்பேரவை கூட்டத் தொடர்: எப்போது தொடங்குகிறது தெரியுமா?

உள்ளாட்சித் தேர்தல் பற்றி திருநாவுக்கரசர் பேசும்போது, “உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில், 'நடப்பது எங்கள் ஆட்சி.. எங்களுக்கு வாக்களித்தால் தான் நலத் திட்டங்கள் கிடைக்கும்' என பொதுமக்கள் மத்தியில் அதிமுக அமைச்சர்கள் பேசி வருகின்றனர். அவர்களது ஆட்சி இன்னும் ஓராண்டு தான் இருக்கும். அதன்பின் வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடிக்கும். எனவே, அடுத்து வரப் போகின்ற, 4 ஆண்டுக்கால திமுக ஆட்சியை எண்ணி பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

அடுத்த செய்தி