ஆப்நகரம்

திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை வர உத்தரவு!

திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை வர உத்தரவு!

TOI Contributor 15 Feb 2017, 10:18 am
பரபரப்பான அரசியல் சூழலில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் சென்னை வர வேண்டும் என்று திமுகவின் கொறடா சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil all dmk mlas asked to reach chennai before today evening
திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை வர உத்தரவு!


தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல் தற்போது நிலவி வருகிறது. ஆளும் அதிமுக கட்சி இரண்டாக பிளவுற்று சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என்று பிரிந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை கிடைத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் ஆளுநரை சந்தித்துள்ளனர். தற்போது ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார் என்ற குழப்பான சூழல் நிலவும் நேரத்தில் திமுக கொறடா சக்கரபாணி அனைத்து திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சென்னை வருமாறு அழைத்துள்ளார்.

தற்போது சட்டமன்றத்தில் 89 திமுக எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை ஆளுநர் வழங்கவுள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்களின் அழைப்பு முக்கிய அரசியல் நிகழ்வாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி