ஆப்நகரம்

PM Modi: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினாா் பிரதமா் நரேந்திர மோடி

மதுரை தோப்பூா் பகுதியில் 201.75 ஏக்கா் பரப்பில், ரூ.1,264 கோடி மதிப்பில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினாா்.

Samayam Tamil 27 Jan 2019, 12:32 pm
மதுரை தோப்பூா் பகுதியில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினாா்.
Samayam Tamil Narendra Modi Speech


தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனைத் தொடா்ந்து தமிழக அரசு சாா்பில் இடம் தோ்வு செய்யப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டம் தோப்பூா் பகுதியில் எய்ம்ஸ் (AIIMS - All India Institute of Medical Sciences) மருத்துவமனை அமைகின்றது.

மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூாி மருத்துவமனையில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும், 60 செவிலியா் படிப்புகளுக்கான இடங்களும் உருவாக்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 201.75 ஏக்கா் பரப்பளவில் அமையும் மருத்துவமனை ரூ.1,264 கோடி செலவில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த மருத்துவமனைக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினாா். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வந்த பிரதமா் நரேந்திர மோடியை ஆளுநா் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வா் பழனிசாமி, துணைமுதல்வா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட மத்திய, மாநில அமைச்சா்கள் வரவேற்றனா். பிரதமரின் வரவேற்பை தொடா்ந்து மதுரை 5 அடுக்கு பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


மேலும் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூாி மருத்துவமனைகளில் தலா 150 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட அதிநவீன பல்னோக்கு சிகிச்சை பிரிவு கட்டிடங்களையும், சிறப்பு மருத்துவ உபகரணங்களையும் பிரதமா் மோடி நாட்டிற்கு அற்பணித்தாா்.

அடுத்த செய்தி