ஆப்நகரம்

3வது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக்; வர்த்தகம் பாதிப்பு; காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு!

நாடு முழுவதும் நீடிக்கும் லாரி ஸ்டிரைக்கால், பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Jul 2018, 7:57 am
சென்னை: நாடு முழுவதும் நீடிக்கும் லாரி ஸ்டிரைக்கால், பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Lorry Strike


எரிபொருள் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு, அதிகரிக்கப்பட்ட மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக மத்திய அரசிடம் பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதையடுத்து கடந்த 20ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட, அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்தது. திட்டமிட்டபடி, லாரி ஸ்டிரைக் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 85 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் சரக்கு வாகனங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. வியாபாரிகளுக்கு முதல் 2 நாட்களுக்கு தேவையான பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் 3வது நாளான இன்று, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.

ரூ.15,000 கோடி அளவிற்கு வர்த்தககம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு இடங்ளில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை தக்காளி ரூ.30, உருளை ரூ.21, வெங்காயம் ரூ.21, கத்தரிக்காய் ரூ.30, கேரட் ரூ.40, பீன்ஸ் ரூ.50, முருங்கை ரூ.25, வெண்டை ரூ.25 என விற்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

All India Lorry Strike continues in third day.

அடுத்த செய்தி