ஆப்நகரம்

ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க முடியாதபடி, சட்டம் நிறைவேற்றம்

ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க முடியாதபடி, சட்டம் நிறைவேற்றம் - சேனாபதி

TOI Contributor 23 Jan 2017, 6:30 pm
ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க முடியாதபடி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என ஜல்லிக்கட்டு பேரவையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Samayam Tamil all of you come to alanganallur to enjoy the jallikattu
ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க முடியாதபடி, சட்டம் நிறைவேற்றம்


சென்னையில் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்று வந்த 10 ஆண்டு போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் ராஜசேகரன் தெரிவித்தார்.

இந்த வெற்றி மாணவர்கள் மற்றும் இளைஞர்களையே சேரும் என ஹிப்ஹாப் தமிழா ஆதி தெரிவித்தார். எக்காலத்திலும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாதபடி நிரந்தர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என கார்த்திகேய சேனாபதி தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டு வர உதவிய மாணவர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி அலங்கநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட அனைவரும் வர வேண்டும் என்றும், மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் கார்த்திகேய சிவசேனாபதி அழைப்பு விடுத்தார்.

அடுத்த செய்தி