ஆப்நகரம்

ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு: இன்று முதல் கட்டாயம்!

தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அனைத்து ஆசிரியர்களும் இன்று முதல் பள்ளிகளுக்கு வருகை தந்துள்ளனர்.

Samayam Tamil 2 Aug 2021, 12:47 pm
தமிழ்நாட்டில் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil school reopen


கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்த போது ஆசிரியர்கள் சுழற்சி முறையில் வரவழைக்கப்பட்டனர். மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருவதால் வீட்டிலிருந்தபடியே கல்வி பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டிருந்தது.
சிக்கப்போகும் அதிமுக மாஜி அமைச்சர்கள் ? தனிப்பிரிவு அமைப்பு!
இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு துவங்கியுள்ளதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை முதற்கட்டமாக பள்ளிகளுக்கு வரவைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் வகுப்பறைகளை தயார்செய்து பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக அனைத்து ஆசிரியர்களும் இன்று (ஆகஸ்ட் 2) முதல் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்து ஆசிரியர்களும் மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பியுள்ளனர். முதற்கட்டமாக வரும் 6ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் அலகு தேர்வுகள் நடத்தவும், அதனை தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களை வரவேற்று அவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபடவும் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சுற்றுலாத் தலங்களுக்கு தடை: அரசு வெளியிடும் அறிவிப்பு?
கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டால் ஆகஸ்ட் 20ஆம் தேதி பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

அடுத்த செய்தி