கொரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று நாடு முழுவதும் முடக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்டன. அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்கி வந்தன.
இதனிடையே, மூன்றாம் கட்ட பொது முடக்கத்தை நீட்டித்த பிரதமர் மோடி சில தளர்வுகளும் அளிக்கப்படும் என்றார். அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதனையேற்று, மாநிலங்களும் சில தொழில்களுக்கு தளர்வுகள் அளித்து வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு வகையான தொழில்கள், தனிக்கடைகள் உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், அரசு அலுவலகங்கள் 33 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கலாம் என கடந்த 3ஆம் தேதி உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது.
திருச்சியில் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு...
இந்த நிலையில், அதில் திருத்தம் கொண்டு வந்து வருகிற 18ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மே 18ஆம் தேதியில் இருந்து 50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம். ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவர். முதல் குழுவினர் திங்கள், செவ்வாய்கிழமை ஆகிய இரு தினங்களும், இரண்டாவது குழுவினர் புதன், வியழக்கிழமை ஆகிய இரு தினங்களும் பணியாற்றுவர். வெள்ளி, சனிக்கிழமைகளில் மீண்டும் முதல் குழுவினர் பணியாற்றுவர். அதற்கு அடுத்த வாரத்தில் வரும் திங்கள், செவ்வாய்கிழமைகளில் இரண்டாவது குழுவினர் பணியாற்றுவர். இப்படி சுழற்சி முறையில் அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.
ஊரடங்கால் ஏற்பட்ட பணி நேர இழப்பை சரிகட்டும் பொருட்டு இனி அனைத்து சனிக்கிழமைகளும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவைப்பட்டால், எந்த நேரத்திலும் ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்: ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!
‘பிரிவு ஏ’ நிலையிலான அதிகாரிகள், அலுவலகத்தின் தலைமை பொற்றுப்பில் அரசு அதிகாரிகள் அனைத்து நாட்களிலும் பணியாற்ற வேண்டும். அனைத்து ஊழியர்கள், அதிகாரிகளும் செல்போன், இ-மெயில் உள்ளிட்ட ஏதாவது ஒரு மின்னணு தொடர்பு முறையில் தொடர்பில் இருக்க வேண்டும். தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். இந்த உத்தரவானது அனைத்து ஆணையங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் உள்பட தலைமை செயலக ஊழியர்கள் முதல் மாவட்ட அளவிலான ஊழியர்கள் வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். மறு உத்தரவௌ வரும் வரை இந்த நடைமுறை செயல்பாட்டில் இருக்கும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மூன்றாம் கட்ட பொது முடக்கத்தை நீட்டித்த பிரதமர் மோடி சில தளர்வுகளும் அளிக்கப்படும் என்றார். அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதனையேற்று, மாநிலங்களும் சில தொழில்களுக்கு தளர்வுகள் அளித்து வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு வகையான தொழில்கள், தனிக்கடைகள் உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், அரசு அலுவலகங்கள் 33 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கலாம் என கடந்த 3ஆம் தேதி உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது.
திருச்சியில் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு...
இந்த நிலையில், அதில் திருத்தம் கொண்டு வந்து வருகிற 18ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மே 18ஆம் தேதியில் இருந்து 50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம். ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவர். முதல் குழுவினர் திங்கள், செவ்வாய்கிழமை ஆகிய இரு தினங்களும், இரண்டாவது குழுவினர் புதன், வியழக்கிழமை ஆகிய இரு தினங்களும் பணியாற்றுவர். வெள்ளி, சனிக்கிழமைகளில் மீண்டும் முதல் குழுவினர் பணியாற்றுவர். அதற்கு அடுத்த வாரத்தில் வரும் திங்கள், செவ்வாய்கிழமைகளில் இரண்டாவது குழுவினர் பணியாற்றுவர். இப்படி சுழற்சி முறையில் அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.
ஊரடங்கால் ஏற்பட்ட பணி நேர இழப்பை சரிகட்டும் பொருட்டு இனி அனைத்து சனிக்கிழமைகளும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவைப்பட்டால், எந்த நேரத்திலும் ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்: ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!
‘பிரிவு ஏ’ நிலையிலான அதிகாரிகள், அலுவலகத்தின் தலைமை பொற்றுப்பில் அரசு அதிகாரிகள் அனைத்து நாட்களிலும் பணியாற்ற வேண்டும். அனைத்து ஊழியர்கள், அதிகாரிகளும் செல்போன், இ-மெயில் உள்ளிட்ட ஏதாவது ஒரு மின்னணு தொடர்பு முறையில் தொடர்பில் இருக்க வேண்டும். தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். இந்த உத்தரவானது அனைத்து ஆணையங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் உள்பட தலைமை செயலக ஊழியர்கள் முதல் மாவட்ட அளவிலான ஊழியர்கள் வரை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். மறு உத்தரவௌ வரும் வரை இந்த நடைமுறை செயல்பாட்டில் இருக்கும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.