ஆப்நகரம்

கருணை அடிப்படையில் விடுதலை: நளினி வேண்டுகோள்

ராஜீவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரோலில் வந்த நளினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TNN 24 Feb 2016, 6:10 pm
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரோலில் வந்த நளினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil all the 7 members should be freed in rajiv assasination case says nalini
கருணை அடிப்படையில் விடுதலை: நளினி வேண்டுகோள்


ராஜீவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள நளினி உள்பட 7 பேரும் கடந்த 25 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களில் நளினியின் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு ஒருநாள் பரோல் அளிக்கப்பட்டது.

வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பரோலில் சென்னை வந்த நளினி, தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நளினி, ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் கருணை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்யும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், தங்களது விடுதலைக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நளினி வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்த செய்தி