ஆப்நகரம்

மக்களே ஹேப்பி நியூஸ்: கடை அடைப்பு ஒத்திவைப்பு!

ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற இருந்த கடை அடைப்பு ஒத்திவைக்கப்படுவதாக வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 7 Aug 2020, 11:28 am
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 10ஆம் தேதி கடை அடைப்பு நடத்தப்படும் என வணிகர் சங்கம் அறிவித்த நிலையில் தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil veg shops


கொரோனா பரவல் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டு தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டது. அண்மையில் பெய்த மழையால், திருமழிசை சந்தையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறிப்போனது. இதனால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி ஒருநாள் மட்டும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு என்று வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்தார்.

நெல்லையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்!

தற்போது இந்த கடை அடைப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர், துணை முதல்வர் இருவரும் வெளி மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதால் அவர்களிடம் ஆலோசனை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த விக்கிரமராஜா தெரிவித்தார்.

ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது, அடுத்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இதனால் இடையில் 10ஆம் தேதி கடை அடைப்பு நடத்துவதன் மூலம் பொது மக்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனவே கடை அடைப்பு வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்படும் என விக்கிரமராஜா கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் காய்கறி, பழக் கடைகள் அடைப்பு... எப்போ தெரியுமா?

பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கோயம்பேட்டில் மீண்டும் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி