ஆப்நகரம்

ஹெச்.ராஜாவை கைது செய்ய வலியிறுத்தி, சமூக வலைத்தளங்களில் ஒன்று கூடிய பெண்கள்!!!

பெண்களின் மாதவிடாய் பற்றி தவறான வகையில் பேசிய, பாஜக கட்சியின் ஹெச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி, பெண்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.

Samayam Tamil 20 Aug 2018, 10:51 pm
பெண்களின் மாதவிடாய் பற்றி தவறான வகையில் பேசிய, பாஜக கட்சியின் ஹெச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி, பெண்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.
Samayam Tamil ஹெச்.ராஜாவை கைது செய்ய வலியிறுத்தி, சமூக வலைத்தளங்களில் ஒன்று கூடிய பெண்கள்!!!
ஹெச்.ராஜாவை கைது செய்ய வலியிறுத்தி, சமூக வலைத்தளங்களில் ஒன்று கூடிய பெண்கள்!!!


திமுகவைச் சேர்ந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன், கடந்த 18-ம் தேதி ‘ஊழியின் நடனம்’ என்ற தலைப்பில் இயற்கை சீற்றம், மழை வெள்ளத்தைப் பற்றி பெண் கடவுளை மையமாக வைத்து கவிதை ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.

அவரின் கவிதை பெண் தெய்வங்களைப் புண்படுத்துவதாக இருப்பதாக கூறி பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், “தனியார் தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன் இந்துக்களின் பெண் தெய்வங்களை இழிவு படுத்தியதற்கு இந்துக்கள் எதிர்வினையாற்றாத காரணத்தால் மனுஷ்யபுத்திரன் என்கிற பெயரில் ஒளிந்து கொண்டுள்ள அப்துல் ஹமீது என்கிற முஸ்லிம் மதவெறியன்அதே செயலில் ஈடுபட்டுள்ளார். காவல்துறையில் புகார் செய்யவும்” என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மனுஷ்ய புத்திரன், பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதனிடையே, மனுஷ்ய புத்திரனின் கவிதையில் பெண்களின் மாதவிடாய் பற்றி பேசப்பட்டுள்ளதாகவும், பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை ஹெச்.ராஜா ‘தீட்டு’ என புரிந்து கொள்ளும் வகையில் பேசியுள்ளதாகவும் கூறி, பெண்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அந்த வகையில், ட்விட்டரில் பெண்கள் அனைவரும் சானிட்டரி நேப்கினில் ‘ஆல் வுமன் பிளீட்’ (All Woman Bleed) என்று எழுதி, All Woman Bleed என்ற ஹேஸ்டேக்கில், ஹெச்.ராஜாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், அவரைக் கைது செய்ய வலியுறுத்தி, ArrestHRaja என்ற ஹேஸ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.

அடுத்த செய்தி