ஆப்நகரம்

ஆதிதிராவிடர்களுக்கு வீடு கட்ட நிலம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஆதிதிராவிடர்களுக்கு வீடு கட்ட நிலம் கையகப்படுத்தியதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 14 Dec 2022, 11:46 am
பயனாளிகளின் விருப்பத்திற்கேற்ப நிலங்களை கையகப்படுத்த அனுமதிப்பது பேராபத்தை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆதிதிராவிடர்களுக்கு வீடு கட்ட நிலம் கையகப்படுத்தியதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil madras hc


திருவள்ளூர் மாவட்டம், பொன்பாடி கிராமத்தில், ஆதி திராவிடர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்க தமிழ்நாடு ஹரிஜன் நலத் திட்டத்துக்காக நிலம் கையகபடுத்தும் சட்டத்தின் கீழ் 2.59 ஹெக்டேர் நிலத்தை கையகபடுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நில உரிமையாளர்களான ரங்கராஜன் மற்றும் சகுந்தலா ரங்கராஜன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாவட்ட ஆட்சியர் உத்தரவில் தலையிட முடியாது என கூறி தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட இந்த நிலம் சதுப்பு நிலம் என்றும், இங்கு எந்த கட்டிடமும் கட்ட முடியாது என தெரிவித்த மனுதாரர் தரப்பு, நிலம் கையகப்படுத்தும் முன் தங்கள் தரப்பு கருத்துகளை கேட்கவில்லை என தெரிவித்தது.
அமைச்சராக உதயநிதி.. இன்று என்னென்ன திட்டம்? வெளியான தகவல்!
அரசு தரப்பில், தங்களுக்கு சதுப்பு நிலம் தான் வேண்டும் என பயனாளிகள் விரும்புவதாகவும், அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே நிலம் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு, வாதங்களை கேட்ட நீதிபதிகள், தாசில்தாரின் அறிக்கை மனுதாரர்களுக்கு வழங்காமலும், நில உரிமையாளர்களுக்கு கருத்து தெரிவிக்க அவகாசம் வழங்காமலும் நிலத்தை கையகப்படுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரேஷ் உபாத்யாய் பணி ஓய்வு!
மேலும், பயனாளிகளின் விருப்பத்திற்கேற்ப நிலங்களை கையகப்படுத்த அனுமதிப்பது பேராபத்தை ஏற்படுத்தும் என நீதிபதிகள் அச்சம் தெரிவித்தனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி