இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 2013 ஆண்டிலேயே மீத்தேன் திட்டதிற்கான மாற்று திட்டத்தை கூறியிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கர்ப்பன் திட்டத்ட்கிற்கு ஏதிராக போராட்டங்கள் வெடித்து வருகின்றனர், இந்த திட்டத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் , சுற்றுசூழல் மாசுபடும் , மக்களுக்கு பெரிய அள்வில் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் இயற்கை வேளாண்மையின் முன்னோடி நம்மாழ்வார் கடந்த 2013-ம் ஆண்டிலேயே கூறியிருக்கிறார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மீத்தேன் திட்டத்தின் விளைவுகள் குறித்து , அந்த திட்டத்திற்கான மாற்று திட்டம் குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் , " மீத்தேன் திட்டத்திற்கு பதிலாக ஒவ்வொரு வீட்டிலும் சாண எரிவாயு கலன் அமைத்து அதன் மூலம் சமையல் எரிவாயு , மின்சாரம் உள்ளிட்டவற்றை தயாரிக்கலாம் . இதற்காக அரசு நிதி ஓதுக்கினாலே போதும் .வீட்டுக்கு ஒரு சாண எரிவாயு கலன் அமைத்து கொடுக்க வழி செய்யாது இந்த அரசாங்கம், மாறாக அதே மீத்தேன்(ஹைட்ரோகார்பன்) போன்ற மண்ணையும் மக்களையும் அழித்தொழிக்கும் வேலைகளில் ஈடுபடுவது இவர்களுக்கு வாடிக்கை.
இந்த மண்ணில் உள்ள வளங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமல்ல மண்ணின் வளங்கள் அரசாங்கத்தின் சொத்து என அரசியல் சாசனத்தில் எங்குமே குறிப்பிடவில்லை என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு தெளிவாக எச்சரிக்கை செய்தும் இருக்கிறது அப்படி இருந்தும் இவர்கள் இந்த இயற்கை எரிவாயு திட்டங்களை கொண்டுவர காரணம், அந்த கம்பெனிகாரன் இவங்களுக்கு ஐயாயிரம் கோடி கொடுத்து ஆறு லட்சம் கோடி லாபம் சம்பாதிக்க தான் இந்த திட்டமே.. மக்கள் தான் ஒன்றிணைந்து போராடி இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த முடியும்." என்று அவர் கூறியிருக்கிறார்.
2013-ம் ஆண்டில் நம்மாழ்வர் அவர்கள் பேசிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நம்மாழ்வார் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடதக்கது.
alternate scheme for metheon scheme : nammazhvar
தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கர்ப்பன் திட்டத்ட்கிற்கு ஏதிராக போராட்டங்கள் வெடித்து வருகின்றனர், இந்த திட்டத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் , சுற்றுசூழல் மாசுபடும் , மக்களுக்கு பெரிய அள்வில் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் இயற்கை வேளாண்மையின் முன்னோடி நம்மாழ்வார் கடந்த 2013-ம் ஆண்டிலேயே கூறியிருக்கிறார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மீத்தேன் திட்டத்தின் விளைவுகள் குறித்து , அந்த திட்டத்திற்கான மாற்று திட்டம் குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் , " மீத்தேன் திட்டத்திற்கு பதிலாக ஒவ்வொரு வீட்டிலும் சாண எரிவாயு கலன் அமைத்து அதன் மூலம் சமையல் எரிவாயு , மின்சாரம் உள்ளிட்டவற்றை தயாரிக்கலாம் . இதற்காக அரசு நிதி ஓதுக்கினாலே போதும் .வீட்டுக்கு ஒரு சாண எரிவாயு கலன் அமைத்து கொடுக்க வழி செய்யாது இந்த அரசாங்கம், மாறாக அதே மீத்தேன்(ஹைட்ரோகார்பன்) போன்ற மண்ணையும் மக்களையும் அழித்தொழிக்கும் வேலைகளில் ஈடுபடுவது இவர்களுக்கு வாடிக்கை.
2013-ம் ஆண்டில் நம்மாழ்வர் அவர்கள் பேசிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நம்மாழ்வார் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடதக்கது.
alternate scheme for metheon scheme : nammazhvar